பிளாஸ்டிக் ஒழிப்பு கலந்தாய்வு கூட்டம்
முதுகுளத்தூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமாரின் உத்தரவின்பேரில், முதுகுளத்தூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி தலைமை வகித்தார். நகர் வர்த்தக சங்கத் தலைவர் வீ. கருப்பசாமி, செயலர் செய்யது அபுதாஹிர், துணைத் தலைவர் இக்பால், கௌரவத் தலைவர் காதர்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என கூட்டத்தில் செயல் அலுவலர் இளவரசி பேசினார். இக்கூட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் இளமாறன், மாடசாமி, பரிதா பேகம், ஆமினாள் பீவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.