பாரில் மது பாட்டில்கள்: 3 பேர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் டாஸ்மாக் பாரில், இருந்த 975 மதுபாட்டில்களை, பரமக்குடி மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை எதிரில், டாஸ்மாக் பாரில், பரமக்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் போலீசார், நேற்று காலை சோதனை நடத்தினர்.
கடை திறப்பதற்கு முன்பாகவே பீர் பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள, 975 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விற்பனையாளர்கள் முதுகுளத்தூர் ராமலிங்கம், விளங்களத்தூர் முருகேசன், பர்மா காலனி வெங்கடா
சலம், ஆகிய மூவரை கைது செய்தனர்.

News

Read Previous

ஆஷூரா தினமும் சுதந்திரப் போராட்டங்களும்!

Read Next

புற்றுநோயைத் தோற்கடித்தவர்கள்

Leave a Reply

Your email address will not be published.