பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்தவர் பரிதாப பலி

Vinkmag ad

பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்தவர் பரிதாப பலி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் மகன் ராஜசேகரபாண்டி(40). மருதகம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் கணேசன் (20). இவர்கள் இருவரும் முதுகுளத்தூரில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் மினி பஸ்சில் சென்றனர். இதில் இருவருக்கும் படிக்கட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. கணேசன், ராஜசேகரபாண்டியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் ராஜசேகரபாண்டியன் படுகாயம் அடைந்தார். 

அவரை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜசேகரபாண்டியனின் தந்தை சித்திரவேல் அளித்த புகாரின் பேரில், முதுகுளத்தூர் போலீஸ் எஸ்ஜ ஜான்சிராணி வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தார்.

News

Read Previous

கவிதை : விஞ்ஞானம்

Read Next

குடிகொண்டே இருக்கின்றார்

Leave a Reply

Your email address will not be published.