பஸ் இயக்கக் கோரி கிராம மக்கள் அமைச்சரிடம் மனு
முதுகுளத்தூர் அருகே சிறுதலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பரமக்குடி, முதுகுளத்தூருக்கு பஸ் இயக்கக் கோரி அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர்.
முதுகுளத்தூர் ஒன்றியம் சிறுதலை ஊராட்சியில் வாச்சியேந்தல், கர்நாடன் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், முதியோர், கர்ப்பிணிகள் பஸ் வசதி இல்லாமல் பரமக்குடி மெயின்ரோடு வரை நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது. சிறுதலை ஊராட்சியில் இருந்து மெயின் ரோடு வரை தார்ச்சாலை இருந்தும் பஸ் இயக்கப்படவில்லை.
எனவே பரமக்குடி அல்லது முதுகுளத்தூரில் இருந்து கிராமத்துக்கு வந்து செல்லும் விதத்தில், காலை, மதியம், இரவு நேரங்களில் பஸ் இயக்கக் வேண்டும் என கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சுந்தரராஜனிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.