பரமக்குடி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
முதுகுளத்தூரில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான 14,17,19 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து, கால்பந்து, சைக்கிள் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற எறிபந்து போட்டியை பள்ளித் தாளாளர் சந்திரசேகரன் தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத், தலைமை ஆசிரியை டி.ஆர்.ஆட்லின் லீமா, மாவட்ட விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர் ஏ.வேதமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுகுளத்தூரிலிருந்து ஆத்திகுளம் வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் போட்டியை முதுகுளத்தூர் காவல்துறை சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தொடக்கி வைத்தார்.