தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
முதுகுளத்தூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் ஐ.ஜேம்ஸ் ஜான்பீட்டர் தலைமை வகித்தார். 6-ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை வழங்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், புதிய கல்விக்கொள்கை வரவு முன்மொழியவும், 7-ஆவது ஊதியக்குழுவை தமிழகத்தில் அமல்படுத்தவும், டிசம்பர் 17}இல் மாவட்ட தலைநகரில் நடைபெற இருக்கும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் அனைவரும் பங்குபெறுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, வட்டார செயலாளர் எம்.பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி எம்.சண்முசுந்தரம், மாவட்டத் தலைவர் ஐ.சூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் கே.குருநாதன் நன்றி தெரிவித்தார்.