தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செல்வநாயகபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் செல்வநாயகபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் உத்தரவின் பேரில் தமிழக முதலமைச்சர் மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு துறையின் சார்பாக வழங்கப்படும், தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் ஊராட்சியில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்வரின் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மிக்ஸி,கிரைண்டர்,மின்விசிறிகள் வழங்கும் திட்டம், 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவ,மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், ஏழை மக்களுக்காக அம்மா உணவகங்கள், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், ஏழை,எளிய மக்கள் பயன்படும் வகையில் விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்பட்ட தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
காண்காட்சியில் ஊராட்சி தலைவர் ஜீவன் செந்தில்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் பள்ளி மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர்.