ஜெயலலிதா விடுதலையாக வேண்டி விஷேச யாகம்

Vinkmag ad

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயிலில் விஷேச சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலர் ஆர்.தர்மர் தலைமை வகித்தார். அமைச்சர் எஸ்.சுந்தரராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வநாயகபுரம் ஊராட்சி தலைவர் ஜீவன் செந்தில்குமார் வரவேற்றார்.

மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெகஜோதி, போகலூர் ஒன்றியச் செயலர் நாகநாதன், அண்ணா தொழிற்சங்க செயலர் என்.ரவிச்சந்திரன், பொருளாளர் அப்துல் லத்தீப், முன்னாள் ஒன்றியச் செயலர் பத்மநாதன், ஊராட்சித் தலைவர்கள் எம்.சத்தியமூர்த்தி, முருகானாந்தம், சிவசுப்பிரமணியன், மீனவரணி முருகேசன், இளைஞரணி சுந்தரமூர்த்தி, அவைத்தலைவர் ராமு, ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் ராமசாமி, கூட்டுறவு சங்கச் செயலர் நாகராஜன், துணைத்தலைவர் பரம்பொருள் காளிமுத்து, கவுன்சிலர்கள் கர்ணன், சீனிமகம்மது, தூரி மாடசாமி, முருகன், வேலுச்சாமி, பேரவை எஸ். மலைக்கண்ணன், கே.அர்ச்சுணன், விவசாய அணி வி.கருப்புசாமி, ஒன்றிய குழுத் தலைவர் இருளாண்டி மற்றும் அதிமுகவினர், ஆப்பநாடு மறவர் சங்க இளைஞர்கள், யாதவர் சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

குடிகாரர்கள் யார்?

Read Next

முதுகுளத்தூரில் பாஜகவினர் தூய்மைப் பணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *