முதுகுளத்தூரில் பாஜகவினர் தூய்மைப் பணி
முதுகுளத்தூரில் பிரதமரின் தூய்மை இந்தியா அறிவிப்பின்படி பாரதி ய ஜனதா கட்சியினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் படி முதுகுளத்தூர் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களை அக்கட்சியினர் சுத்தம் செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணித் தலைவர் முருகேசன், மாவட்டச் செயலர் எம்.மங்களேஸ்வரி தலைமை வகித்தனர். பொருளாளர் புவனேந்திரன், ஒன்றியச் செயலர் கே.காளிமுத்து, நகர் தலைவர் விஜயக்குமார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அவைத்தலைவர் எம்.சந்திரசேகரன், இளைஞரணி தலைவர் சசிக்குமார் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.