சிக்கல் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்கள்
சிக்கல் ஊராட்சிக்கு அதிக பஸ்கள் வந்து செல்லும் இடமாக இருந்தும், பஸ் ஸ்டாண்டில் போதிய வசதி இல்லாததால், ரோட்டில் பஸ்களை நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்கல் ஊராட்சிக்கு பரமக்குடி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து, தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன.
பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இருந்தும் பெரும்பாலான பஸ்கள் ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பாதசாரிகள் ரோட்ரோங்களில் நடப்பதற்கு பதில், நடு ரோட்டில் நடுக்கும் அவலம் உள்ளது. இதனால், எதிர் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு ஏற்ப பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி பஸ்கள் உள்ளே சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.