கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
முதுகுளத்தூர்:காத்தாகுளத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 20. மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். டிச.,31ம் தேதி, முதுகுளத்தூரில் வீட்டருகே உள்ள ரோட்டில் பெயின்டில் வாசகம் எழுதினார். இதில் இவருக்கும், முதுகுளத்தூர் வடக்கூரை சேர்ந்தவருக்கும் தகராறு
ஏற்பட்டது.
இவரை, சின்னமருது, மணி, இளவரசன், சதீஷ்குமார் உட்பட ஏழு பேர் தாக்கினர். இவரது புகார்படி, போலீசார் விசாரித்து
வருகின்றனர்.