கருமலில் செயல்பாட்டிற்கு வருமா மகளிர் சுகாதார கழிப்பறை?

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கருமல் ஊராட்சியில் மகளிர் சுகாதார கழிப்பறை பயன்பாடற்று கிடக்கிறது. இதனை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் செயல்பாட்டிற்கு கொ ண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர் அருகேயுள்ள கருமல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மகளிர் மற்றும் குழந்தைகள் பயன்பாட்டிற்காக சுகாதார கழிப்பறை கட்டப்பட்டது. இதனை முறையாக பயன்படுத்தாததால் பயன்பாடற்று போனது.  அத்துடன் ஆழ்குழாய் கிணறும் பழுதடைந்து விட்டது.

கழிப்பறை கோப்பைகள், இரும்பு கதவுகள் மற்றும் ஜன்னல்கள்  பழுதடைந்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரங்கள் கழிப்பறையாக மாறியுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கிராமத்து பெண்கள் கூறுகையில், கழிப்பறையை பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

News

Read Previous

இல்லறத்தில் இனிது வாழ்க !

Read Next

வைட்டமின் சி – அற்புதமானதொரு வேதிப்பொருள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *