கண்மாய்க்குள் முதியவர் சடலம் மீட்பு
முதுகுளத்தூர் அருகே வெள்ளிக்கிழமை கண்மாய்க்குள் முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்கால் கண்மாய்குள் 65 வயது மதிக்கத் தக்க முதியவர் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து அவர் யார் என விசாரித்து வருகின்றனர்.