இடைத் தேர்தலில் வெற்றி: அதிமுக கவுன்சிலர் பதவி ஏற்பு
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் 7-ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவருக்கு ஆணையாளர் திங்கள்கிழமை பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழத்தூவல் ஒன்றிய உறுப்பினர் பதவி காலியாக இருந்து. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ பதினெட்டாம்படியான் மகன் டாக்டர் கே.பி. பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
இவருக்கு ஆணையாளர் (ஊராட்சிகள்) நாகேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஆணையாளர் ஆர். குருநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஐ. சுதந்திரகாந்தி இருளாண்டி, கவுன்சிலர் உடை. எம். சிவக்குமார், ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் ராமசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பரம்பொருள் ஆர். காளிமுத்து, அண்ணா தொழிற்சங்க ஒன்றியச் செயலர் எம். சேதுபதி, இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலர் மாரி உள்பட ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.