ஆர்.டி.ஓ., ஆய்வு
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதி கூட்டுறவு கடன் சங்கங்களில், வி.ஏ.ஓ., க்களால் விவசாய நிலங்களுக்கு அடங்கல் சான்று வழங்குவதை, பரமக்குடி ஆர்.டி.ஓ., குணாளன் ஆய்வு செய்தார்.
இவர் கூறியதாவது: நெல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வசதியாக, கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளின் நிலங்களுக்கு அடங்கல் சான்று வழங்கபட்டு வருகிறது. இதை பெற்று பட்டா, கம்ப்யூட்டர் 10 (1) அடங்கலுடன் சிறு, குறு விவசாயிகள், ஏக்கருக்கு 116 ரூபாய் செலுத்தி, பயிர் காப்பீடு செய்யலாம்.
அடுத்த வாரம் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில், கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள், வி.ஏ.ஓ., க்களிடம் அடங்கல் சான்றுகளை பெற்று கொண்டு, டிச.,15க்குள் பதிவு செய்யுமாறு தெரிவித்தார்.