ஆட்டோ மீது வேன் மோதல்: பெண் எஸ்.ஐ. உள்பட 3 பேர் காயம்

Vinkmag ad

சாயல்குடியில் ஆட்டோ மீது வேன் நேருக்கு நேர் மோதியதில் பெண் எஸ்.ஐ உள்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.

முதுகுளத்தூரில் இருந்து சாயல்குடி அருகே உள்ள தங்கம்மாள்புரத்துக்கு ஆட்டோவில் சென்னை க்யூபிராஞ்ச் எஸ்.ஐ தமிழ்ச்செல்வி (37) அவரது கணவர் முருகானந்தம் ஆகியோர் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். சாயல்குடி வீரப்பெருமாள் கோயில் அருகில் சென்றபோது வேகமாக வந்த வேன் நிலை தடுமாறி ஆட்டோ மீது மோதியது. இதில் தமிழ்ச்செல்வி, முருகானந்தம், மற்றும் ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தமிழ்ச்செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சாயல்குடி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து தூத்துக்குடி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News

Read Previous

சர். சி. வி. ராமன்

Read Next

சென்னையில் காஜா மாமியார் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.