அதிக விலைக்கு யூரியா: மக்கள் மறியல்
முதுகுளத்தூர் அருகே மைக்கேல் பட்டணத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது.
இங்கு கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக் கூறி கீழத்தூவல், மகிண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மகிண்டி விலக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் பேச்சு வார்த்தை நடத்திய மறியலை கைவிடச்செய்தனர்.
சாம்பக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலும் யூரியா தட்டுப்பாட்டை கண்டித்து விக்கிரமபாண்டிபுரம், கேளல், சம்பக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த
கிராம மக்கள், வங்கியை முற்றுகையிட்டனர்.