அண்ணி
அண்ணி
=========
ஆர் எஸ் கலா
இலங்கை
==========
அண்ணாவுக்கு
துணைவி ஆனால்
எனக்கு அன்னையானாள்
ஊருக்கு மலடியானாள்.
ஊமைக் கிளியானாள்.
உள்ளத்திலே என்னைத்
தாங்கும் தொட்டிலானாள்.
என்னாலே உறக்கத்துக்கு
பகையானாள்.
பசிக்கு எதிரியானாள்.
தாலாட்டுக்கு குயிலானாள்.
நான் பிறந்ததுமே அம்மா
இறந்தமையால் பால்
சுவையும் கண்டது இல்லை
பாசமும் அறிந்தது இல்லை.
அள்ளி அணைத்த அன்னைாக
என் அண்ணி வாரியே வளங்குகிறாள்
பாசத்தை கொடை வள்ளளாக வே
அவளை எண்ணி.
வீதிக்கு அவள் போனால்
பார்ப்பவர் கண்ணுக்கு
பட்ட மரம் வீட்டுக்குள் அவள்தானே
எனக்கு பரந்த நிழல்.
என் கண்ணுக்கு அவள்
இமையானாள் அவள்
கைக்கு நான் மலரானேன்.
அவள் மூச்சே நான் தான்
என்று அண்ணா காதில்
பேச்சி தினமும்.
மீன்டும் கர்ப்பக் குடலில்
நான் நுழைய முடியும் என்றால்
இந்த நொடியே கரைந்து
நுழைந்து விடுவேன்
அண்ணியின் உடலில்.
அம்மா என்றும் அழைக்க வில்லை.
அண்ணி என்றும் அழைக்கவில்லை.
ஊமை விழி போல் என்
மொழியும் ஊமையாகப் போனது.
இறைவனைக் கண்டால் நான்
கேட்கும் வரம் ஒரு தடவை குரல்
கொடு அன்பாக நான் அழைக்க
வேண்டும் என் அண்ணியை என்று
வரம் கேட்பேன்……\