நபிவழித் திருமண (நிக்காஹ்) நிகழ்ச்சி அறிவிப்பு
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் போரூர் மண்டலம், திருவள்ளுர் மாவட்டம், பட்ரோடு ஜும் ஆ மஸ்ஜித் கிளை, வளசரவாக்கம் மக்கா மஸ்ஜித் விசேஷ நற்செயல் கமிட்டி மற்றும் மதுரவாயல் ஆறு ஜமாஅத் கமிட்டி சார்பில்
நபிவழித் திருமண (நிக்காஹ்) நிகழ்ச்சி அறிவிப்பு
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும் இன்ஷா அல்லாஹ் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறவட்டார மஹல்லாக்களைச் சார்ந்த 30 ஜோடிகளுக்கு (ஒரு ஜோடிக்குச் சுமார் 45 ஆயிரம் ரூபாய் செலவில்)
இன்ஷா அல்லாஹ் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி ஞாயிறு காலை 10-30 மணியளவில் தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அவர்கள் தலைமையில் நிக்காஹ் நடைபெற இருக்கிறது.
நிக்காஹ் நடைபெறும் இடம் :
கண்டோன்மென்ட் போர்டு திருமண மண்டபம்
பரங்கி மலை, சென்னை – 600 016
(பட்ரோடு ஜும் ஆ பள்ளிவாசல் அருகில்)
இந்நிகழ்ச்சியின் மூலம் நிக்காஹ் செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் மஹல்லாவைச் சார்ந்த நிர்வாகிகள் அல்லது வளசரவாக்கம் மக்கா மஸ்ஜித் விசேஷ நற்செயல் கமிட்டி நிர்வாகிகளிடம் அதற்குண்டான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தங்கள் மஹல்லா பள்ளி நிர்வாகிகளின் பரிந்துரையுடன் 31-05-2015 தேதிக்குள் கொடுத்துத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எத்தீம் மற்றும் ஊனமுற்ற ஜோடிகளுக்கும், முன்னதாக வந்து சேரும் விண்ணப்பத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
இப்புனித நற்செயலுக்கு இயன்ற உதவிகளைச் செய்துதவவும் விழைகிறோம்.
விழாக் குழுவினர்
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
மக்கா மஸ்ஜித் 126 ஸ்ரீ லட்சுமி நகர், வளசரவாக்கம், சென்னை- 600 087
விவரங்களுக்கு அலைபேசி எண்கள் :
9282115749, 9444391567, 9444626515, 9444086785, 9444285649, 9841163052, 9840299120, 9840288338