One Comment

  • கவிஞர் ஜெயராமனுக்கு வாழ்த்துக்கள்!

    ஜெயராமா,
    வாழ்த்துக்கள்!
    வளர்க உன் எழுத்துப் பணி
    மேன்மேலும் நிறைய நூல்கள் வெளியிட
    வாழ்த்துக்கள்!!.

    மிக மிக மகிழ்ச்சிகரமான செய்தி
    இன்றைக்கு காலையில் முகநூல் திறந்ததும்.

    என் பள்ளித்தோழர் ஜெயராமனின் முதல் கவிதை நூல் “குறைந்து போன கடிதப் பழக்கம்” வெளியீடு. மட்டற்ற மகிழ்ச்சி.

    நான் சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, பள்ளிப் பருவத்தில்(1996) பிரிந்த நாங்கள் சுமார் 16 ஆண்டுகள்(2012) இடைவெளிக்குப் பிறகு முகநூல் மூலம் மீண்டும் இணைந்தது. முக நூலுக்கு மிக்க நன்றி.

    அதைவிட எதிர்பாராதது அவன் ஒரு கவிஞனாக ஆகியிருப்பது.
    காலம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்தேன்.

    பொருளாதார தேடல்
    நமது எண்ணங்களையும் மற்றும் ஆசைகளையும் மாற்றியிருந்தாலும், நிறைவேற்ற முடியாமல் போயிருந்தாலும் –
    நீ உன் எண்ணத்தை செயல்படுத்தியமைக்கு என் வாழ்த்துக்கள்.
    பெருமை கொள்கிறேன், உன் நட்பில்.

    வெவ்வேறு தேசத்தில் இருந்தாலும்,
    இனி என்றும் இணைந்திருப்போம் நம் மொழியால், எழுத்தால்.

    வளர்க உன் எழுத்துப் பணி
    மேன்மேலும் நிறைய நூல்கள் வெளியிட என் வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்
    சஞ்சய் பிரபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *