தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்
வெள்ளி 03.10.2014 காலை 10.00 மணி அளவில் தமிழ்த்தேர் நண்பர்களின்
ஒன்றுகூடல் துபாய் கராமா சிவ ஸ்டார் உணவு வளாகத்தில்
அருவி என்னும் தலைப்பில் கவிதைகள் பெருக முழங்கவிருக்கிறது.
தாய்மொழி தமிழை.. முன்னோர் மொழிந்த நம் செம்மொழியை…
வழிமொழிய வாரீர்.. வாரீர்.. என்றே அழைக்கிறோம்!!
மேடையில் பேசிடும் கலைதனை வளர்ப்போம்!
ஒவ்வொரு உள்ளத்திலும் ஓராயிரம் திறமைகள்…
உள்ளதை நாமே உணர்ந்து கண்டெடுப்போம்!
ஒவ்வொரு திங்களில் ஒரு நாள் காலை…
உணர்வுடன் தமிழால் ஒன்றிக்கிடப்போம்!
தமிழர்கள் கூடும் கவிதைப் பூங்கா..
கருத்துகள் பொழியும் அற்புதச் சோலை!
உறவாய் அமைவது நம் உயிர்த்தமிழே!!
உங்களின் வருகை உறுதியாகட்டும்!!
வரவேற்கிறோம்…
காவிரிமைந்தன்
ஜியாவுதீன்
ஆதிபழனி
திண்டுக்கல் ஜமால்
இலட்சுமி நாராயணன்