இராமநாதபுரம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
இன்று (08/02/2020) ராமநாதபுரம் சந்தை திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பாக நடைபெறவிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான
திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர்
பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும்,
காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர்
திரு. ARCV சண்முகம் அவர்களும்
மற்றும் தோழமை கட்சி முக்கிய தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மூத்த முன்னோடிகள் அனைவரும் பங்கு பெற இருப்பதால் தோழமைக் கட்சி சொந்தங்கள் அனைவரும் பெருந்திரளாக கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
கே.நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
Tags: இராமநாதபுரம் நவாஸ் கனி