முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்
இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனையும் இணைந்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இன்று இலவச சர்க்கரை நோயாளிகளுக்கான கண், கால் சிகிச்சை முகாமும், பொது மருத்துவ முகாமும், நடைபெற்றது .
இந்த முகாமை மாவட்ட தலைவர் எம். வாவா ராவுத்தர் தலைமை ஏற்று நடத்தினார்.
மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ராஜா அவர்கள் முகாமை ஒருங்கிணைத்தார்கள்.
மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, நகரத் தலைவர் சேட் ஜாகீர் உசேன், நகர செயலாளர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர இளைஞரணி செயலாளர் செய்யது மீரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
நகர துணை செயலாளர் ஷேக் ஜமீல் அஹமது சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மேலும் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் சலீமுல்லாஹ் கான் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA எழுதிய நபிகளாரின் சமூக உறவு என்ற புத்தகத்தை வழங்கி சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சின்ன கண்ணு அவர்களும்,
வட்டாட்சியர் சடையாண்டி அவர்களும்,
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி அவர்களும்,
சிபிஎம் தாலுகா செயலாளர் முருகன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் துணைத் தலைவர் காதர் முகைதீன், பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர் உசேன், முஸ்தபாபுரம் ஜமாத் தலைவர் செய்யதுஇபுறாகிம்,
தமுமுக மத்திய மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகிம், சுலைமான்,பாபு மற்றும்
மேற்கு மாவட்ட தமுமுக செயலாளர் சிந்தாஷேக் மதார்,
மாவட்ட துணைச் செயலாளர் நூருல் ஹுதா,
அணி செயலாளர்கள் முகமது யாக்கூப் சுற்றுச் சூழல் அணி) முகமது யூசுப் (விவசாய அணி) ஹபீப் முஹம்மது, (SMi) அல்பஹத் (விளையாட்டு அணி)
நகர துணை செயலாளர்கள் முகமது காசிம், சீனி முஹம்மது ,சாகுல் ஹமீது, ஜாகீர் உசேன் மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நகரச் செயலாளர் அப்துல் ரகுமான் நன்றி உரை கூறினார்.
இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை பெற்றனர்.