புதுக்கோட்டை அருகே மகளிர் தின விழா

Vinkmag ad

புதுக்கோட்டை அருகே மகளிர் தின விழா

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் நேற்று செவ்வாய்க்கிழமை 08 மார்ச் 2022 அன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடந்தது.
இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பெண்களின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார். பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறப்பான சாதனைகளை செய்து வருதாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சலாவுதீன், வளன், தினேஷ், தெய்வேந்திரன், இர்பான் மற்றும் புஷ்கரம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

இந்த விழாவில் கிராம நிர்வாக அலுவலர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

News

Read Previous

ஷரீஅத்தின் போர்வாள் டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹழ்ரத் நினைவேந்தல்

Read Next

பரமக்குடியில் சக்ஸஸ் அகாடமி மற்றும் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை இணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி.Group2&2A அரசுப் பொதுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்க விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *