பணிவே பண்பானது !
பணிவே பண்பானது ! 🙏
குறையற்ற மனிதர் குலத்தில் உண்டோ
நிறைந்து வாழ்வரே நிற்பராம் உயரமே
தரமுயர் குணமுடை தகைமை மாந்தர்
உரமுடை பெரியரை உயர்வென மதிப்பார்.
எள்ளல் என்பதில் இனிமைக் காண்பவர்
உள்ளல் குறையினர் உலகமே உணரும்.
தெள்ளல் நல்லார் தெரிவார் புரிவரே .
அறிந்தது இறைவனே அளித்ததும் அவனுமே.
முறிந்திடு மன்பையே முனைவரோ உறவினர்.
நாநயம் நயமாய் நன்நட்புக் காக்கும்.
தேநயம் பணிவென தெளிந்தே வாழ்வோமே !
மைசூர் இரா.கர்ணன்
(தேநயம் =தலைவனின் சிறப்பு, மூத்த வயதினர் சிறப்பு, கற்றவர் சிறப்பு)
Tags: பணிவே பண்பானது !