துபாய் வந்த குவைத் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

Vinkmag ad

துபாய் வந்த குவைத் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் :

துபாய் நகருக்கு குவைத் நாட்டின் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் என். அமீர் அஹமது வருகை புரிந்தார். அவருக்கு அமீரக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் புதிய தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் மற்றும் புதிய பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

அதனையடுத்து அமீரகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விவரிக்கப்பட்டது.

இதனை கேட்டறிந்த அமீர் அஹ்மது அமீரக சங்கத்தின் சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் மாணவர் சங்கங்கள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

News

Read Previous

கடின உழைப்புடன் படித்தால் அரசுப் பணியில் உயர் நிலையை பெறலாம்

Read Next

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *