துபாயில் ’திருச்சி கோல்டு’ புதிய நகைக்கடை திறப்பு விழா
துபாயில் ’திருச்சி கோல்டு’ புதிய நகைக்கடை திறப்பு விழா
துபாய் :
துபாய் தேரா கோல்டுசூக் பகுதியில் உள்ள கோல்ட்லேண்ட் கட்டிடத்தில் ‘திருச்சி கோல்டு‘ என்ற புதிய நகைக்கடை கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த புதிய நகைக்கடையை மயக்கவியல் துறையின் டாக்டர் முஹம்மது யாக்கூப் திறந்து வைத்தார். இந்த விழாவில் ‘திருச்சி கோல்டு‘ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ஒய். ஹபிபுல்லா மற்றும் அவரது குடும்பத்தினர், கீழக்கரை வர்த்தக பிரமுகர் சதக் காக்கா, தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிர்வாகி டாக்டர் பால் பிரபாகர், சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத், வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags: ‘திருச்சி கோல்டு‘ உள்ள என்ற கட்டிடத்தில் கோல்டுசூக் கோல்ட்லேண்ட் துபாய் தேரா நகைக்கடை பகுதி புதிய