ஹைக்கூ கவிதைகள்
வீட்டினுள் விழுந்தன
வளர்பிறை வெண்மதிகள்
வெட்டிய நகங்கள்’.
பூச்சிக்கொல்லி மருந்தையும்
குடிப்போம்
அயல்நாட்டுபானம்!
கோயிலுக்கு குந்தகமென்றால்
கருவறையும் அகற்றலாம்
கருப்பை!
இறைவனும் இறைவியும்
இணக்கத்துடன் இணைந்தார்கள்
அரவாணிகள்!
நாத்திகனுக்கு
கோவிலிலென்ன வேலை
அன்னதானம்!
இதழ்களின் மேல்
கருவண்டு
மச்சம்!
அறைந்தாள்
முத்தம் கொடுத்தான்
அப்பா!
இயற்கையும்
உறைகூழ் கொடுத்தது
நுங்கு!
கூட்டமாய் வந்து
உள்ளாடை திருடினார்கள்
மணல் கொள்ளை!
-அபிநயா,துபாய்.