வேப்ப மரம்

Vinkmag ad

கவிஞர்கள் சங்கமம்
தலைப்பு

வேப்ப மரம்

அன்று
பேய்களெல்லாம்
வேப்ப மர உச்சியில்
ஆடியது

இன்றோ
நாம் மரத்தை வெட்டியதால்
திரைப்படத்தில்
ஆட வந்துவிட்டது

எத்தனை சட்டங்கள்
போட்டாலும்
மரம் சட்டங்கள்
செய்யவே வெட்டப்படுகிறது

மனித நிழலில்
கிடைக்காத ஞானம்
புத்தனுக்கு மரத்தின்
நிழலில் கிடைத்தது

நோய் தீர்க்க
வேம்பு தரும்
எண்ணெய்

இறைவா
அடுத்தப் பிறவியில்
வேம்பு மரமாக்கு
என்னை

அன்று
பூச்சிகளைக்
கொள்ள
வெப்பங்கொழுந்தே
மாத்திரை

இன்றோ
மாத்திரைகள்
போட்டன அதற்கு
மா திரை

மனிதா
அமில மருந்துகளை
நீ விலக்கு

இயற்கை மருத்துவத்தின்
மகத்துவத்தை
நீ விளக்கு

அப்போதுதான்
அணையாது எரியும்
உன் வீட்டு விளக்கு

கவிஞர் புதுவைக் குமார்

News

Read Previous

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

Read Next

சபதத்தை நிறைவேற்றிய இந்திய விஞ்ஞானிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *