வாழ்வியல்
கவிதை
வாழ்வியல்
அன்பின் இருப்பிடம் தாய்மை
பண்பின் பிறப்பிடம் பொறுமை
நட்பின் இலக்கணம் தூய்மை
சொல்லின் இனிமை உண்மை
உள்ளத்தில் உயர்வு நற்சிந்தனை
உயரத்தில் வைக்கும் உன்னை
இரவு விடிந்தால் வெளிச்சம்
இயற்கையே உன்னை காக்கும்
அடக்கம் வேண்டும் மனதில்
அமைதி என்றும் நிலவுமே
மதி வழி நடந்திட நினைத்தால்
மனதில் துணிவும் பிறக்குமே
புதுமை செய்திட நினைத்தால்
கடமையில் கவனம் தேவை
எதுவரை வாழ்க்கை வேண்டும்
நினைத்தது கிடைக்கும் மட்டும்
( கி. ஜீவா அசோகன்,
திருவண்ணாமலை, 9444428592 )
Tags: வாழ்வியல்