வாழ்ந்து காட்ட வேண்டும்

Vinkmag ad

வாழ்ந்து காட்ட வேண்டும்

 

–அம்புரோஸ்
● பூமியில்
விதைக்கப்பட்ட விதை கூட
எதிர்ப்பைச் சமாளித்து
முளைத்துக் காட்டுகிறது.
● ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது.
● பெரிய மீன்களால்
ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.
● மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன.
● ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய
பறவைகளும் மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன.
● சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.
● தண்ணீரே இல்லாத
பாலைவனத்தில் உயிர்
தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன.
● ஒரு நாள் மட்டுமே
வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும்,
அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன.
● இப்படி பலகோடி
உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால்
வாழ முடியாதா..?
● எப்படியும் வாழ்ந்தே
ஆகவேண்டிய வாழ்க்கை.
● அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ வேண்டும்?
● அதை ஏன் வெறுத்துக் கொண்டு
வாழ வேண்டும்?
● அதை ஏன் தப்பிக்கப்
பார்க்க வேண்டும்?
● அதை ஏன் அழுதுகொண்டு
வாழ வேண்டும்?
● மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.!
● இது உன் வாழ்க்கை என்றபோது
மிச்சம் இருப்பது ஆனந்தத்தை
தவிர வேற என்ன இருக்கிறது.
● ஆகவே,..!
ஆனந்தமாக வாழ்வோம்,
வாழ்ந்து காட்டுவோம்
உலகுக்கு ஒருசான்றாக.
💎  💎  💎  💎 💎  💎

வாழ்வியல் சிந்தனை.

News

Read Previous

அப்பாவின் கோரிக்கை …….

Read Next

கதிரவனின் ஒளிப்பட்டு

Leave a Reply

Your email address will not be published.