வழிபாடுகள்

Vinkmag ad
வழிபாடுகள்
====================================================ருத்ரா
ஆமென்
என்று சொல்லிவிட்டு
எல்லோரும் போய்விட்டார்கள்.
வெறிச்சோடியது.
சுரூபங்கள்
சத்தமிடாமல் மனிதனின்
ரத்த சரித்திரங்களை
மௌனித்து மௌனித்து
கேளா ஒலியில் பிரசங்கம் செய்தன.
மரப்பெஞ்சுகள் நீள நீளமாய்
கால் நீட்டிப் படுத்துக்கிடந்தன.
மனிதர்களின் நிழல்கள் அங்கே
தங்கியிருந்தன.
சோற்றுக்கவலைகளும்
பணத்தின் வேட்டைகளும்
அவர்களை வெளியே
மேய விட்டிருக்கின்றன.
அந்த பெரிய மணியின் ஓசை
அலையின்
ராட்சச நாக்குகளாய்
புல் மேய்ந்து கொண்டிருந்த
ஆட்டுக்குட்டிகளை
நக்கிக்கொடுத்தது.
கசாப்பு கத்திகளின் முனைகளில்
அடுத்த வழிபாடு
ஆரம்பிக்கும் வரை.

News

Read Previous

மலேசியாவில் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழா!

Read Next

பக்ரீத் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *