பக்ரீத் வாழ்த்துக்கள்

Vinkmag ad
பக்ரீத் வாழ்த்துக்கள்
🕌🕋🌙
 
அஸ் ஸலாமு அலைக்கும் .

இறைவன் ஆணையால்

இப்ராஹிம்  தன்  மகனை 
இறைபலி கொடுத்த நாளாம் .
இறைபலி கொடுக்கும்முன் 
இறைவனோர் ஆட்டை 
முதற்பலி கொடுக்கவைத்தார் .
பலிகொடுத்த ஆட்டினை 
மூன்று பங்காக்கியே 
முதற்பங்கு ஏழைகட்கும் 
அடுத்த பங்கு உறவினருக்கும் 
 அளித்ததன் பின் மீந்திடும்
மூன்றாம் பங்கைத்  தனக்குமாய் 
எடுத்திட  ஆணையிட்டார் .
இப்படித்தானே பக்ரீத் என்னும் 
தியாகத் திருநாள்  வந்ததுவாம். 
வரியோர் பசிதீர்த்து மகிழ்ந்திடவே    
வாய்ப்பாய்  அமைந்த திருநாளில் 
குர் ஆன் ஓதி தொழுகை செய்து 
சுயநலம் தன்னைத் தியாகம் செய்து 
இதயம் கனிந்து ஈகை புரிந்து 
இறைவன் ஆணையை நிறைவேற்றி 
மறுமை நாளில் இறைவன்முன்னே 
மனமகிழ்வுடனே நின்றிடுவோம். 
கருணை நிறைந்த அல்லா அருளால் 
சுவனம் தன்னில் நிலைபெறுவோம். 
பக்ரீத் வாழ்த்துக்களுடன் 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
21.08.2018

News

Read Previous

வழிபாடுகள்

Read Next

வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *