மாடுகள் முட்டி மலை சரியுமா???

Vinkmag ad

 

 

பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட
பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது?
மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு
மண்புழுக்கள் வளைவதையா ‘ட’னா என்பது?

கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக்
கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது?
கவிஞனாக ஆசையென்றால் கற்றுப் பார்ப்பது- அது
கைவராது போனதென்றால் விட்டுத் தீர்ப்பது!

கவிதையுடன் உரைத்துணுக்கா கைகள் கோப்பது?-மலர்க்
கதம்பத்துடன் கற்களையா கூட்டுச் சேர்ப்பது?
புவிபுகழும் புதுமையென்றா புலம்பித் திரிவது?-என்ன
புதுமையடா அலிகள் கூடிப் பிள்ளை பெருவது!

கடிதத்துக்கே மொழியறியான் கதைக்குப் போவது-அதில்
காலைவிட்டு வாலைநீட்டிக் கவிஞன் ஆவது
வடிவமின்றி முடிவுமின்றி வரியை ஒடிப்பது-அதை
வரம்பில்லாத கவிதையென்றா கயிறு திரிப்பது?

சிப்பிக்குள்ளே சிறுதுகளும் முத்தாய் மாறலாம்-கலைச்
சிந்தையிலே உணர்வுபொங்கிக் கவிதை ஊறலாம்
குப்பைக்குள்ளே கோழிகிண்டிப் புழுவைத் தின்னலாம்-அது
குன்றிமணி யானதென்றால் யாவர் நம்பலாம்?

குடைபிடிக்கும் குஞ்சர்களை மேடை ஏற்றலாம்-வெறுங்
கூலங்களை நூலாய்ப்போட்டுக் கூத்துக் காட்டலாம்!
துடைப்பத்துக்கும் பட்டுக்குஞ்சம் கட்டிப் பார்க்கலாம்-அது
துள்ளித்துள்ளிக் கவிஞனென்று ஊரை ஏய்க்கலாம்!

காலம்மாறும் ஊரும்தேறும் கல்விசிறந்திடும்-இந்தக்
காலிப்பானை சட்டிகளைக் காறி உமிழ்ந்திடும்!
கோலம்மாறி எத்தர்களின் கொட்டம் ஒடுங்கிடும்-புகழ்க்
குன்றின்மீது தமிழ்க்கவிதை என்றும் ஒளிர்ந்திடும்!

வம்பர்கூடித் தமிக்கவிதை மரபை உடைக்கவா? -சில
மாடுமுட்டி மலைசரிந்து மண்ணில் கிடக்கவா?
கும்பலோடு குஞ்சரோடு முயன்று பாரடா!-உங்கள்
குறுக்கொடித்துக் கொழுப்படக்கும் கவிதை வீறடா!

 

அகரமுதல 39

 

 

 

அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய

 

ஆண்டவனுக் கியலாத காரணத்தால்

 

தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள்

 

தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால்

 

எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி

 

ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா?

 

தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத்

 

 

 

 

News

Read Previous

தாய்மொழி தமிழெனும் அரும்பேறு – – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

Read Next

பெருமானாரின் பத்துக் கட்டளைகள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *