மரம்

Vinkmag ad

மரம்

மரமாய் இருந்த நான்

மகானாய் மாறிவிட்டேன்

மனிதனாய் இருந்த நீ

மரமாகிப் போனாயே

 

நீ உண்ண கனி தந்தேன்

தேன் தங்க இடம் தந்தேன்

உறங்க நிழல் தந்தேன்

பறவைக்கும் வீடு தந்தேன்

 

என்னை கொன்றதால்

நீ மரம் ஆனாய்

நான் மகான் ஆனேன்

 

ஒ மனிதா !!!

 

வெட்டி என்னை கட்டையாக்கினாயே

என் குட்டி ஒன்றை நட்டு வளர்த்தாயா ?

நீ இறந்தால் என்னில் ஒருவன் சாகின்றான்

வெட்டியான் கையில்

கொள்ளி கட்டையாக

 

நான் இல்லையேல்

நன்னிலம் இல்லை

நான் இல்லையேல்

நீ சுவாசிக்க காற்று இல்லை

நான் இல்லையேல்

நீ குடிக்க நீர் இல்லை

 

இல்லை என்ற சொல் இல்லாமல் போக

என் குட்டி ஒன்றை நட்டுவிடு

நாளை பலன் தரட்டும்

 

அஹமது அஷ்பாக்

 

News

Read Previous

இஸ்லாம் வாளால் பரவியதா?

Read Next

பரிணாமக் கோட்பாடு தவறா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *