மரம்
மரம்
மரமாய் இருந்த நான்
மகானாய் மாறிவிட்டேன்
மனிதனாய் இருந்த நீ
மரமாகிப் போனாயே
நீ உண்ண கனி தந்தேன்
தேன் தங்க இடம் தந்தேன்
உறங்க நிழல் தந்தேன்
பறவைக்கும் வீடு தந்தேன்
என்னை கொன்றதால்
நீ மரம் ஆனாய்
நான் மகான் ஆனேன்
ஒ மனிதா !!!
வெட்டி என்னை கட்டையாக்கினாயே
என் குட்டி ஒன்றை நட்டு வளர்த்தாயா ?
நீ இறந்தால் என்னில் ஒருவன் சாகின்றான்
வெட்டியான் கையில்
கொள்ளி கட்டையாக
நான் இல்லையேல்
நன்னிலம் இல்லை
நான் இல்லையேல்
நீ சுவாசிக்க காற்று இல்லை
நான் இல்லையேல்
நீ குடிக்க நீர் இல்லை
இல்லை என்ற சொல் இல்லாமல் போக
என் குட்டி ஒன்றை நட்டுவிடு
நாளை பலன் தரட்டும்
அஹமது அஷ்பாக்
Tags: மரம்