மனிதரிலே…! மனிதரிலே!

Vinkmag ad

பாடல்:A.முஹம்மது மஃரூஃப்
ராகம்:தனிமையிலே இனிமை காணமுடியுமா

மனிதரிலே…! மனிதரிலே!
மனிதரிலே புனிதர் யாரு தெரியுமா!
மகமூது நபியை மீறி மனம் அறியுமா!
மனிதரிலே புனிதர் யாரு தெரியுமா!

பிழையில்லாத வான்மறையாய் வாழ்ந்தவரே!
அவர் அள்ளி அள்ளி வழங்குவதில் வல்லவரே!(2முறை)
நபி உமிழ்ந்தால் உமிழ்நீரும் புனிதமே!(2முறை)
வரும் வியர்வையிலும் நறுமணமே வீசிடுமே!
(மனிதரிலே….! மனிதரிலே!)

நபி வரவால் ஒளியிருக்கும் இருள்களில்லை!
நபிவழி நடந்தால் மகிழ்விருக்கும் கவலையில்லை!(2முறை)
நபி பொருட்டால் அருள் கிடைக்கும் குறைவதில்லை!(2முறை)
நான் பாடும் கவியில் ஏதும் பொய்மையில்லை!
(மனிதரிலே…..!மனிதரிலே!)

மலைக்குகையில் தவமிருந்தார் மாநபியும்!
அங்கு வஹியுடனே விரைந்துவந்தார் வானவரும்!(2முறை)
படைத்த ரப்பின் திருப்பெயரால் ஓதிடனும்!(2முறை)
என்ற வார்த்தையிலே துவங்கியது நபித்துவமும்!
(மனிதரிலே….! மனிதரிலே!)

News

Read Previous

வெள்ளி பனி மலையின் மீதுலாவுவோம்

Read Next

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *