மண்……….

Vinkmag ad

மண்ணை உழுபவருக்கு பொண்னை கொடு
மரத்தை நடுபவருக்கு விருதை கொடு

பொது வேலையில் ஈடுபட சொல்லிக்கொடு
பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு

தண்ணீரை சேமிக்க சொல்லிகொடு
தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லிவிடு

தாய் தந்தைக்கு நல்லதை செய்
அவர்கள்
தளர்ந்த பின் நீ தளராமல் செய்

உனக்காக ஒர் மரம் வை
உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை
இதை சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை

பிள்ளை பிறந்தாலும் மரம் வை

பேர் வைத்தாலும் மரம் வை

மகள் பெரியவள் ஆனாலும்
மரம் வை

நாட்டுக்காக நாலு நூறு மரம் வை

இச்செயலை நண்பர்களையும் செய்ய வை

இதை ஊராரிடமும் சொல்லி வை

பசுமையை பற்றி சொல்லிக்கொடு
அதை உருவாக்க இப்பவே முயற்ச்சியை எடு

பணம் வாழ தேவை
காற்று வாழவே தேவை
மரம் அதற்க்கு தேவை
நமக்கு இதுவே தேவை
மறந்தால் நாம்தான் பேதை

குளத்தை வெட்டி வை
மரத்தை நட்டு வை
நிலத்தை உழுது வை
தண்ணீரை சேமித்து வை

பல்லுயிரும் செழிக்க
பசுமை ஆகும் என்று சொல்லிவை..

News

Read Previous

உண்மையான பரிசு!

Read Next

இஸ்லாமிய மார்க்கம் மத துவேசத்தை தூண்டியதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *