உண்மையான பரிசு!

Vinkmag ad

இன்றைய சிந்தனை.04.10.2019….
…………………………………..

‘ உண்மையான பரிசு!*..
…………………………………….

நம் வாழ்க்கையில் சில மலிவாற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு கை விடுவதற்கு தயாராக இல்லை.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள், உறவுகள், போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்து இருக்கலாம்..

அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்…ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன…. நாம்தான் அவைகளை கண்டு கொள்வது இல்லை..

ஐந்து வயது சிறுமி அமுதா தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி ‘ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்’ மாலை வாங்கி தரசொல்றேன்… இது வேண்டாம்மா” என்றாள் அம்மா.

ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்து மாலையை வாங்கிக் கொண்டாள்…

அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் பிடித்தமான பொருளாகிப்போனது.

அதை எங்கு சென்றாலும் அணிந்து இருந்தாள் . பள்ளிக்கு செல்லும் போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும் போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

அமுதாவின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் அமுதாவுக்கு படுக்கும் முன் கதை சொல்வார்.

ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு… என்னை உனக்கு பிடிக்குமா?””ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா… நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா.. என்றாள். “பரவால்லை குட்டிம்மா .என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா.

இது பலநாள் இரவுகள் அப்பா அந்த முத்து மாலையை கேட்பதும் அவரது மகள் மறுப்பதும் தொடர்ந்தது..
சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது….

அமுதா ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா…” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள்.

அது பழசாகியும்… சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார்.

அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்து மாலை இருந்தது.”இதை உனக்கு தருவதற்கு கத்தான்டா அம்மு… நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்…” என்றார் அப்பா.

ஆம்.,நண்பர்களே..,

சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்.போலியான மலிவான களை நாம் கைவிட வேண்டும்.

News

Read Previous

ஷார்ஜாவில் தமிழக இளைஞருக்கு விருது

Read Next

மண்……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *