பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்
….பேச்சினில் புகழ்ந்ததுமே
பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப்
…பிறழ்ந்திடும் வேளையிலே
கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல
…காத்திட விரும்புவாளே
விண்ணின் தாரகை யல்லள் மேதினி கொள்ளும்
…விளக்கதன் சுடராவாள்!
–அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி