போலிப் போராட்டக் களம்

Vinkmag ad
போலிப்போராட்டக் களம்

தேச பக்திக்குப் பெயர் பெற்ற  பஞ்சாபில் -அந்நிய

தேசத்திலிருந்து  மறைமுகமாய் செயல்படும்

தேச விரோதிகளால் தூண்டப்பட்ட கூட்டமொன்று
தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு  – புனிதமான
தேசியக்கொடியை அவமதித்து , செங்கோட்டைக்குள் நுழைந்து
காலித்தனமாக அதைக்கிறீழிறக்கி , காலிஸ்தான் கொடியேற்றி
வன்முறையில் ஈடுபட்டு வெறியாட்டம் ஆடியதே .
காசை விட்டெறிந்தால் , தாயைக்கூட கூட்டித்தரும்
வேசைத்தனம் செய்யும் , விவஸ்தையற்ற கட்சிகளும்,
விலைபோன  ஊடகங்களும் , விவசாயிகள் போராட்டமென
விவரித்து வந்ததன் , விளைவன்றோ  இவ்விபரீதம் .
 பத்து கட்டப் பேச்சு வார்த்தையில் பயனில்லை .
உச்ச நீதிமன்ற உத்தரவும் ஏற்கவில்லை.
 சுயலாபத்திற்காகத்   தூண்டிவிட்ட கட்சிகளோ
 சூடுகண்ட பூனைபோல் ஓடுகின்ற நிலைசூழ்நிலையில்.
பாரதம் முழுவதும் இல்லாத பாதிப்பு
பஞ்சாபில் மட்டும் எப்படி பாதிக்கும்  .
யாரதை எடுத்துரைத்து , யாரத்தை ஏற்றிடுவார்  – இந்தப்
குயுக்திகொண்ட   போராளிகளின் குள்ளநரித்தனம்
குடியரசு தினத்தன்று  குவலயம் அறிந்தது.
ஆதரித்தோரெல்லாம் அரண்டு போயினர் .
தூண்டிவிட்டோரெல்லாம் துவண்டு போயினர்.
இனி இந்தப்போராட்டம் பிசுபிசுத்துப்போகும்.
இன்னல் விளைத்த கூட்டம் நசித்துப்போகும்.
இடைத்தரகர்கள் கூட்டம் , இழிநிலைக்குப் போகும்.
எதிர்க்கட்சிகளின் நிலை ஏளனத்திற்குள்ளாகும்.
விவசாயிகளுக்குப் பலன் விரைந்து சென்று  சேரும் .
விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

News

Read Previous

நபி ( ஸல் ) அவர்கள் விரும்பி சாப்பிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள்..!

Read Next

ஐக்கூ சார்ந்த கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *