போலிப் போராட்டக் களம்
போலிப்போராட்டக் களம்
தேச பக்திக்குப் பெயர் பெற்ற பஞ்சாபில் -அந்நிய
தேசத்திலிருந்து மறைமுகமாய் செயல்படும்
தேச விரோதிகளால் தூண்டப்பட்ட கூட்டமொன்று
தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு – புனிதமான
தேசியக்கொடியை அவமதித்து , செங்கோட்டைக்குள் நுழைந்து
காலித்தனமாக அதைக்கிறீழிறக்கி , காலிஸ்தான் கொடியேற்றி
வன்முறையில் ஈடுபட்டு வெறியாட்டம் ஆடியதே .
காசை விட்டெறிந்தால் , தாயைக்கூட கூட்டித்தரும்
வேசைத்தனம் செய்யும் , விவஸ்தையற்ற கட்சிகளும்,
விலைபோன ஊடகங்களும் , விவசாயிகள் போராட்டமென
விவரித்து வந்ததன் , விளைவன்றோ இவ்விபரீதம் .
பத்து கட்டப் பேச்சு வார்த்தையில் பயனில்லை .
உச்ச நீதிமன்ற உத்தரவும் ஏற்கவில்லை.
சுயலாபத்திற்காகத் தூண்டிவிட்ட கட்சிகளோ
சூடுகண்ட பூனைபோல் ஓடுகின்ற நிலைசூழ்நிலையில்.
பாரதம் முழுவதும் இல்லாத பாதிப்பு
பஞ்சாபில் மட்டும் எப்படி பாதிக்கும் .
யாரதை எடுத்துரைத்து , யாரத்தை ஏற்றிடுவார் – இந்தப்
குயுக்திகொண்ட போராளிகளின் குள்ளநரித்தனம்
குடியரசு தினத்தன்று குவலயம் அறிந்தது.
ஆதரித்தோரெல்லாம் அரண்டு போயினர் .
தூண்டிவிட்டோரெல்லாம் துவண்டு போயினர்.
இனி இந்தப்போராட்டம் பிசுபிசுத்துப்போகும்.
இன்னல் விளைத்த கூட்டம் நசித்துப்போகும்.
இடைத்தரகர்கள் கூட்டம் , இழிநிலைக்குப் போகும்.
எதிர்க்கட்சிகளின் நிலை ஏளனத்திற்குள்ளாகும்.
விவசாயிகளுக்குப் பலன் விரைந்து சென்று சேரும் .
விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் உருவாகும்.