பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் !
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ![ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ]jeyaramiyer@yahoo.com.auஇறைவனிடம் கையேந்துங்கள் – அவன்இல்லையென்று சொல்லுவதில்லைகருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்காட்சிதர மறுப்பதுமில்லைஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்உள்ளமதில் வந்துநின்றிடுவான்தெளிவுடனே தினமும்தேடுங்கள் – அவன்சீக்கிரமாய் உதவவந்திடுவான்ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்எங்களுடன் இணைந்துநின்றிடுவான்தோழமையாய் இருந்துபாருங்கள் – அவன்துயர்துடைக்க வந்துநின்றுடுவான்கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்கருணைமழை பொழிந்துநின்றிடுவான்கண்ணீரால் நனைத்துப்பாருங்கள் – அவன்காலமெலாம் உதவிநின்றிடுவான்சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்தனைமறந்து பக்கம்வந்திடுவான்தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்இனிமையெலாம் தந்துநின்றிடுவான்காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்சோதியென நினைத்துப்பாடுங்கள் – அவன்சுகமனைத்தும் தந்துநின்றிடுவான்நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்நீதிதர மறுப்பதுமில்லைபொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்பூரணமாய் தந்துநின்றிடுவான்
wrote by :
eezekkial@gmail.com
அழகிய சிந்தனை
அடிமனத் தெழுந்திடும்
அதுவே சிற்பிக்கு
சிலைதரும்!
பழகிய இலக்கியம்
பயனுறு மொழிதரும்
பண்பட அதுவே
கலைதரும்!
உழுபடும் நிலமே
உயிர்வர உதவிடும்
உடன்விழு விதையில்
பயிர்தரும்!
தொழுதிடும் மனமே
துயரது களைந்திடும்
தொடர்ந்திடும் அமைதி
நிலைதரும்!
–எசேக்கியல்காளியப்பன்
Tags: பொறுமை