பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் !

Vinkmag ad
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் !
                     [ எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ]
jeyaramiyer@yahoo.com.au
keattuppaarungal
     இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
     இல்லையென்று சொல்லுவதில்லை
     கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
     காட்சிதர மறுப்பதுமில்லை
      ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்
      அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்
      நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்
      நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்
     உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்
     உள்ளமதில் வந்துநின்றிடுவான்
     தெளிவுடனே தினமும்தேடுங்கள்  – அவன்
     சீக்கிரமாய் உதவவந்திடுவான்
     ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்
     எங்களுடன் இணைந்துநின்றிடுவான்
     தோழமையாய் இருந்துபாருங்கள் – அவன்
     துயர்துடைக்க வந்துநின்றுடுவான்
     கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்
     கருணைமழை பொழிந்துநின்றிடுவான்
     கண்ணீரால் நனைத்துப்பாருங்கள் – அவன்
     காலமெலாம் உதவிநின்றிடுவான்
     சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்
     தனைமறந்து பக்கம்வந்திடுவான்
     தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்
     இனிமையெலாம் தந்துநின்றிடுவான்
     காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்
     கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்
     சோதியென நினைத்துப்பாடுங்கள் – அவன்
     சுகமனைத்தும் தந்துநின்றிடுவான்
    நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்
    நீதிதர மறுப்பதுமில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
    பூரணமாய் தந்துநின்றிடுவான்

wrote by :

eezekkial@gmail.com
அழகிய சிந்தனை
அடிமனத் தெழுந்திடும்
அதுவே சிற்பிக்கு
சிலைதரும்!
பழகிய இலக்கியம்
பயனுறு மொழிதரும்
பண்பட அதுவே
கலைதரும்!
உழுபடும் நிலமே
உயிர்வர உதவிடும்
உடன்விழு விதையில்
பயிர்தரும்!
தொழுதிடும் மனமே
துயரது களைந்திடும்
தொடர்ந்திடும் அமைதி
நிலைதரும்!
–எசேக்கியல்காளியப்பன்

 

kaieanthungal

News

Read Previous

உங்கள் மொபைல் போன் பேட்டரியை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

Read Next

இந்திய தேசியச் சின்னங்கள்

Leave a Reply

Your email address will not be published.