பொங்கல் வாழ்த்துக்கள்

Vinkmag ad
பொங்கல் வாழ்த்துக்கள்

மாதவனைக் கும்பிட்ட மார்கழித் திங்கள்  – முடிந்து

ஆதவனைக் கும்பிடுவோம் தை முதல்  நாளில்
பனி மூட்டம் விலகுதல் போல்  பாரினிலே மாந்தர்கள்
பட்ட துன்பம் விலகட்டும் போகி நன்னாளில் .
தீய எண்ணங்களை போகித்  தீயிலிட்டுக் கொளுத்தி
தூய எண்ணங்களோடு துவங்கிடுவோம் நாளை.
கதிரறுத்த வயலினிலே , களமொன்று ஏற்படுத்தி
கதிரவனுக்குப் பொங்கல் படையல் செய்திடவே
புத்தடுப்பு  கொண்டுவைத்து .புதுப்பானை அடுப்பிலேற்றி
கொத்து மஞ்சள் அதன் கழுத்தினிலே சுற்றிவைத்து
புத்தாடை தானுடுத்தி , பூசைகள் தான் நடத்தி
இத்தனை நாள் உழவுக்கு , உறுதுணையாய் இருந்திட்ட
கதிரவனுக்கும் , காளைகளுக்கும் நன்றி செலுத்தும் நாள் .
உழவர்திருநாள் என்றும் , தமிழர் திருநாள் என்றும்
புத்தாண்டு நாள் என்றும் , பலவாறு அழைத்திடுவார் .
சங்கராந்தியென்பார், பைசாகி என்றிடுவார் ,
பாரதம் முழுவதும் இருக்கின்ற மக்களெல்லாம்
பல்வேறு பெயர்களில் இந்நாளை அழைத்திடுவார் .
அனைவரும் கொண்டாடும் சமத்துவப்பொங்கலன்றோ .
பெயரில் என்ன உண்டு , பேரின்பம்தான் வேண்டும்.
வயலில் உழைப்பவனின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். .
சோறூட்டும் விவசாயியின் ,சோகம் தீரவேண்டும்.
இயற்கையும் அவனுக்கு இன்னல் தராதிருக்கவேண்டும்.
அளவோடு மழைபெய்து அறுவடை சிறக்கவேண்டும்.
உழவன் வாழ்ந்தால்தான் உலகோர்க்கு வாழ்வு எனும்
உண்மையுணர்ந்து நாம் உழவரைபோற்றிடுவோம்.
மங்கட்டும்  இந்த மன்பதையில் துன்பங்கள்
பொங்கட்டும் பூவுலகில் பொலிவான இன்பங்கள் .
அன்படன் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

மணமகள் தேவை

Read Next

இரட்டை சொற்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *