பெண் குழந்தைகளின் வேண்டுகோள்
“பெண் குழந்தைகளின் வேண்டுகோள்”கடித்துமென்று சாறுகுடித்துத் துப்பிடக் கரும்புச்சக்கையல்ல நாங்கள்!சிறகுபிய்த்து சீரழித்து செயலிழக்கச்செய்ய சிட்டுக்குருவிகள் இல்லைநாங்கள்!கொத்திக்கிழித்துக் கூறுபோட்டுத்திண்ண
கோழிக்குஞ்சுகளும்அல்லநாங்கள்!முளையிலேயே கிள்ளியெறிந்து வேரோடு வெட்டிசாய்த்திட விஷச்செடிகளுமில்லை!கசக்கிப்பிழிந்து எங்கள்கண்ணீரை பன்னீராக்கிமுகர்ந்திட தோட்டத்துமலர்களுமல்ல நாங்கள்!அங்கங்களில் மட்டும்உங்களிலிருந்து ஓரிரெண்டுவித்தியாசங்கள் அதனால்பங்கமளிக்க நினைப்பதேன்எங்களிடம் என்னகூடுதல்உங்கள்தாய்க்கும் மேலாக?உடன்பிறந்தவளைவிடவும்உடல்மாற்றங்கள் ஏதுமில்லையே?காமம்தலைக் கேறும்போதுஞானமிழப்பதேன்?வெறித்தனம் கூடும்போதுநெறிகெட்டுப் போவதேன்?படிப்பறிவு பெற்றும்பகுத்தறிவு பெறாததேன்?மனசாட்சியை மறந்துமனிதனென்று வாழ்வதேன்?நினைவு தடுமாறும்போதுதன்நிலைத் தடம்மாறாதீர்கள்பாலியல்தொல்லை கொடுக்காமல்பாதுகாப்பு கொடுத்திடுங்கள்!வெட்டவெட்ட வளரும்மரமல்ல நாங்கள்,பட்டுபோன்ற மனம்கொண்டபெண்குழந்தைகள்!காரைக்குடி. ஃபாத்திமாஹமீத்ஷார்ஜா.