புல்லாங்குழலே !
குழலே ! கண்களில் தென்படா காற்றுக்கும் உருவம் தரும்
இன்னிசையே !
உள்ளங்களை இசையால் இன்புறச் செய்யும் மாயமே !
மெல்லிசையில் மேனியை வருடும்
இளம் தென்றலின் சாயலே !
கண்ணனின் கைப்பொருளே !
மூங்கிலில் பிறந்த முத்தாரமே !
ஆனந்த ராகம் எழுப்பும் அற்புதமே !
மனங்களை மயக்கும் மந்திரமே !
இசை உலகின் பொக்கிஷமே புல்லாங்குழலே !
கவிஞர் சை. சபிதா பானு
காரைக்குடி
Tags: புல்லாங்குழலே !