புனித ரமலான் வாழ்த்துக்கள்
புனித ரமலான் வாழ்த்துக்கள்
இஸ்லாம் என்னும் ஒருமதமாம் .
இறைவன் வகுத்த திருமதமாம்
அமைதியை போதிக்கும் அருமதமாம் .
அகிலம் போற்றும் பெருமதமாம்
அல்லா ஒருவன்தான் இறைவன் .
எல்லோருக்கும் அவன் துணைவன் .
இல்லாதவர்க்கு ஈதல் செய்யும்
நல்லோர்க்கருளும் நாயகனாம் .
புனித ரமலான் மாதத்தில்
இனிதே நோன்பு கடைபிடிப்பார் .
அல்லாவைத் தொழுது கஞ்சிதனை
அனைவருடனும் பகிர்ந்திடுவார்
எந்த மதத்தவராயினுமே
இப்தார் நோன்பில் கலந்திடுவார் .
இப்பார் முழுதும் இணக்கமுடன்
இருப்பதை உலகிற்குணர்த்திடுவார் .
குர்- ஆன் கூறும் அறவழியை
குறைவின்றி நாளும் கடைபிடித்து
தொழுகை முறையாய் செய்பவர்க்கு
தொல்லைகள் தீர்க்கும் மார்க்கமிது .
நபிகள் காட்டும் வழியினிலே
நன்மைகள் செய்து வாழ்பவர்க்கு
சுவனத்தின் வாசல் திறந்திருக்கும் .
கவனத்தில் கொள்வோம்அனைவருமே
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்