புனித நோன்பே வருக !
புனித நோன்பே வருக !
புனித நோன்பே வருக !!
உணர்வும் புலனும்
ஒழுக்கத்தால் சிறந்து…!
உணவுப் பாதைகளுக்கு பகல்
ஓய்வெனும் மருந்து…!
உண்ணும் மாலையிலோ
ஒற்றுமையாய் விருந்து…!
பாவமும் பிழையும்
தீய்ந்திடும் அனல் கனன்று…!
பசித்த உடலும் மனமும்
சுவைத்திடும் வேதம் உணர்ந்து…!
பண்படும் மாதம் ரமலான்;
புண்படப் பேசுதல் களைந்து…!
புவிதனில் சோதரம் தளைக்க
புனித நோன்பே வருக பிறந்து !!!
“மு. பஷீர், மஸ்கட்
Tags: நோன்பு