புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வழக்கம் போல வருது புத்தாண்டு.
வழக்கம் போல வாழ்த்துப் பரிமாற்றம்.
வழக்கமான புது நம்பிக்கைகள்.
வழக்கமான புத்தாண்டு உறுதிமொழிகள்.
எண்ணமும் செயலும் சரியாக இருந்தால்
எண் மாற்றம் மட்டும் என்ன செய்துவிடும்.
”எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியராகப்பெறின்” என்றார் வள்ளுவர்.
தீர்க்கமாக சிந்தியுங்கள் .
திட்டமிட்டு செயல்படுங்கள் .
தீமைகளை விலக்கிடுங்கள் .
தீர்வுகளை அறிந்திடுங்கள்.
திடசிந்தனை கொண்டு
தடைகளைத் தகர்த்திடுங்கள்.
உழைப்பை நம்புங்கள்
உண்மையை நம்புங்கள் .
வெளிப்படைத் தன்மை
வேதனைகள் தீர்த்திடலாம்.
ஆத்திகர் என்றால் ஆண்டவனைத் துணை கொள்க.
நாத்திகர் என்றால் , நல்லெண்ணம் துணை கொள்க .
இத்தனை ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்தது.
எத்தனை வாழ்த்துக்கள் பலித்தன . எத்தனை பல்லிளித்தன.
நல்லுறவைப்பேண வாழ்த்துக்கள் உதவட்டும்.
நல்லெண்ணம் வளர்ந்து நல்வாழ்க்கை அமையட்டும்.
பதினேழில் கிடைத்தவை , பதினெட்டில் தொடரட்டும்.
புதிதாக நன்மைகள் புத்துணர்வு நல்கட்டும்.
அன்புடன்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .
Tags: புத்தாண்டு வாழ்த்துக்கள்