புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வெள்ளிக்கிழமையில்
உள்ளம் மகிழ
அள்ளித்தரும் புத்தாண்டு
துள்ளிக் குதித்து வருகிறது.
வருக புத்தாண்டே , நன்மைஎலாம்
தருக புத்தாண்டே.
இந்த ஆண்டு துன்பமெல்லாம் இத்தோடு போகட்டும்.
வருமாண்டு மக்களுக்கு வருமானம் பெருகட்டும்
வறுமை நீங்கட்டும். வளமெல்லாம் பெருகட்டும்.
தீவிரவாதம் தீய்ந்து போகட்டும்
மதவாதம் மாண்டு போகட்டும்
பயங்கர வாதம் பயந்து ஒடுங்கட்டும்
அரசியலாரது அக்கிரமம் அழியட்டும் .
அரசுகள் மக்களுக்காய் ஆட்சி நடத்தட்டும்.
சாதி, இன , மொழி , சண்டைகள் மறையட்டும்.
நீதித்துறை சுதந்திரமாய் நீதி நிலைநாட்டட்டும்.
அண்டை நாடுகளெல்லாம் அரவணைத்துச் செல்லட்டும்
அனைத்து நாடுகளும் வல்லரசாய் மாறட்டும் .
இயற்கை வளங்களை எல்லோரும் காக்கட்டும்
இயற்கை நம் எல்லோரையும் காக்கட்டும்.
அஞ்ஞானம் அகலட்டும் , விஞ்ஞானம் வளரட்டும்.
விளைச்சல் பெருகட்டும் , விவசாயம் தழைக்கட்டும்.
ஒற்றுமை ஓங்கட்டும் , வேற்றுமை மறையட்டும்
ஆத்திகம் தழைக்கட்டும் ,நாத்திகம் நசிக்கட்டும்.
பகைமை நீங்கட்டும். பகுத்தறிவு வளரட்டும்.
நம்பிக்கை கொள்வோம். நல்லதே நடக்கட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்