பிராத்தனை
பிராத்தனை
=============
ஒற்றை மரத்தடியில்
நான் நின்று உன்
நினைவைச் சுமங்கையிலே
ஓரப் பார்வை பார்த்தவனே
ஒரு தடவை நீ பேச வில்லையே….\
ஓ வென்றும் சோவென்றும்
கொட்டிய மழையும் காற்றும்
உன்னை இழுத்து வந்து என்
திண்ணையிலே விட்ட நொடியே….\
வாவென்றும் அழைக்க முடியாமல்
போவென்றும் விரட்ட முடியாமல்
கன்னி உள்ளம் தவித்தது தனியே..\
அறியாத பாசம் புரியாத நேசம்
உன் மேலே அன்றே வந்தது
காதலடா…………\
மழை விட்டதும் என்
மணையை விட்டு நீ
மறைந்து விட்டாய் என்
மனம் எங்கும் நிறைந்து விட்டாய்…\
ஒற்றைப் பாதை வழியை
என்இரட்டைக் கண்ணும்
தினமும் பார்க்கின்றதடா
தொட்ட குறை விட்ட
குறையாகப் போனதடா…\
கண்ணி நான் காத்திருக்கேன்
கண் இமைக்காமல்
பார்த்திருக்கேன் காளை
உன்னைச் சேரவே தவம்
இருக்கேன்…….\
நடையாக நீ போகையிலே
தடையாக மழை வர வேண்டும்
உடையோடு நீ நனைந்து என்
கடை தேடி வர வேண்டும்.\
கோடான கோடி நன்றி
கொட்டும்மழைக்கு நான்
கூற வேண்டும்……\
உன்னிடம் விட்ட என் மனதை
பட்டென நான் கூறா விட்டாலும்
என் உள்ளத்தில் நீ தான்
என்று புரியும் வண்ணம்
நான் இருக்க வேண்டும்
நட்டு வைத்த மரம் போல்
என் காதலும் நிலைக்க
வேண்டும்………\